எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
பாடல் மட்டுமல்ல படமும் பிடிக்கும் !
உங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன் !
அ..ஆ ..ஹா ஆ..ஹா அ..ஆ ..ஹா... அ..ஆ ...அ..ஆ..
நீதானா நீதானா நெஞ்சே நீ தானா..
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா!
அன்பே அன்பே எந்தன் அன்பே..
வாழும் ஜீவன் நீதான் அன்பே..
துணை நீயே.. அன்பே!
நீதானா நீதானா நெஞ்சே நீதானா..
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா..
காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை!
கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை!
காதல் அலை வீசும் கடல்-தான் மனது
காலம் பல காலம் இது வாழுவது..
தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது
தோல் மீது சாய்ந்தாட ஏங்கியது....
நீ இன்றி நான் ஏது நேசமோடு வாழும் மாது
நீதானா நீதானா நெஞ்சே நீதானா..
-நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீ தான் அன்பே
துணை நீயே அன்பே
நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா..
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா!
கூவி வரும் புதுக் குயிலின் குரல் வழியே ஒரு துயரம்!
பாடி வரும் மொழிதனிலே பாதியிலே ஒரு சலனம்!
ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை உண்மை
இதை கண்டும் மனம் கேட்பதில்லை......
காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும்!
கையோடு கையொன்று சேர்ந்திருக்கும்
வாடாதே வாடாதே வாசம் இந்த பூவைத் தேடும்..
நீதானா நீதானா நெஞ்சே நீதானா..
நீ இன்றி நானேதான்.. இங்கே வாழ்வேனா!
அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே.. அன்பே..
நீதானா நீதானா நெஞ்சே நீதானா.......
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா
படம்:- தாலாட்டு பாடவா
பாடியவர்:- எஸ்.ஜானகி, அருண்மொழி
இசை:- இளையராஜா


No comments:
Post a Comment