காதலிக்க காட்டிய அக்கறையை
ஏன் கல்யாணத்தில் காட்ட
மறந்து மறுத்து விட்டாய் !
உன் கண்களில் இருக்கும்
என் உருவத்த்தை ஏனோ ..
கண்ணீரில் கரைக்கிறாய் ..
அதற்காக காதலை மறுப்பதா?
அன்பே
சூழ்நிலை காரணமாய்
நீ என்னை மறந்து
வேறொரு வரை திருமணம்
செய்தாலும் ..
உன்னை வாழ்த்த வருவேன் ..
அதுதான் என் கடைசி சந்திப்பு
என நினைக்காதே ?
நீ என்னை ஏமாற்றியதற்காக
உனக்கு வலியை தருவேன் ..!

வயிற்றில் எட்டி உதைப்பேன் ..
உன் கருவறையிலிருந்து அழுது
கொண்டே வெளிவருவேன் ..
அப்போதும் உன் உயிராக ……
என்றும் அன்புடன்
கண்ணன்



No comments:
Post a Comment